என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரமோற்சவம்
- 20-ந் தேதி தொடங்குகிறது
- முதல் நாள் இரவு அனுக்ஞை, மிருத் ஸங்க்ரஹணம், விஷ்வக்சேனர் வீதி உலா நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை ராம கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி 52-வது பிரமோற்சவ விழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. விழா 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாள் இரவு அனுக்ஞை, மிருத் ஸங்க்ரஹணம், விஷ்வக்சேனர் வீதி உலா நடைபெறுகிறது. மறுநாள் காலை 10-30 மணிக்கு பிரமோற்சவ விழா கொடி ஏற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து விழா நாட்களில் காலையில் விசேஷ ஹோமங்கள், திருமஞ்சனம் நடக்கிறது. இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருடசேவை 24-ந்தேதி (வியாழன்) இரவும், 29-ந்தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன. அன்று இரவு புஷ்பயாகம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன் கிழமை) இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்