search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி சாவு
    X

    கோப்பு படம்.

    நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி சாவு

    • புதுவை அரும்பார்த்தபுரம் புது தெருவை சேர்ந்தவர் மணிமாலா என்ற மணிமேகலை. இவரது கணவர் கார்த்திகேயன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
    • கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ஜெ.ஜெ.நகரை சேர்ந்த மாடசாமி மற்றும் லேம்பர் சரவணன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர்களுடன் தக்ககுட்டை சுடுகாடு அருகே மது குடித்து கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரம் புது தெருவை சேர்ந்தவர் மணிமாலா என்ற மணிமேகலை(வயது39). இவரது கணவர் கார்த்தி

    கேயன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகள் கலைவாணிக்கும் திருமணமாகி பெரிய காட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

    மணிமேகலையுடன் மற்ற இரு மகன்களும், ஒரு மகளும் வசித்து வருகின்றனர். இளைய மகன் கலையரசனுக்கும், பக்கத்து வீட்டாருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதனால் கலையரசன் இங்கு இருந்தால் மீண்டும் தகராறு ஏற்படும் என நினைத்து மணிமேகலை கலையரசனை நெற்குன்றத் தில் உள்ள அவரது சகோதரி மகாநதி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ஜெ.ஜெ.நகரை சேர்ந்த மாடசாமி மற்றும் லேம்பர் சரவணன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர்களுடன் தக்ககுட்டை சுடுகாடு அருகே மது குடித்து கொண்டி ருந்தனர். இதையடுத்து கலையரசனுக்கும் மாடசாமி மற்றும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த தகவல் அறிந்து வந்த மணிமேகலை கலை யரசனை அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்க வில்லை.

    பின்னர் விசாரித்த போது தக்ககுட்டையில் உள்ள ஒரு குளத்தில் யாரோ குதித்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிமேகலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் தீயணைப்பு துறையினர் கலையரசனின் உடலை குளத்தில் இருந்து மீட்டனர். இதைய டுத்து மணிமேகலை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    பின்னர் போலீசார் மாடசாமி மற்றும் மணிகண்டன் தாக்கியதில் கலையரசன் பயந்து போய் குளத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×