search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோரிமேடு, தர்மாபுரி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    கோப்பு படம்.

    கோரிமேடு, தர்மாபுரி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணரப்பேட்டை மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பொதுப்பணித்துறை பொது சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவைதனகோடி நகர் மற்றும் சாணரப்பேட்டைமேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணி வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தனகோடிநகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணரப்பேட்டை மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    காந்தி திருநல்லூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி காரணமாக 29-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை காந்தி திருநல்லூர், தனபாலன் நகர், கல்கி நகர், சேரன் நகர், அகத்தியர்கோட்டம், அருணா நகர், கணபதி நகர், என்.ஆர்.ராஜீவ் நகர், வள்ளலார் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    கோரிமேடு (இந்திராநகர் அரசு தொடக்கப்பள்ளி அருகில்) பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பொதுப்பணித்துறை பொது சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×