search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேர்திருவிழா
    X

    கொடியேற்றத்துடன் தொடங்கிய கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேர்திருவிழா

    • தமிழகம் மட்டுமின்றி மும்பை கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.
    • திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த பிள்ளையார்க்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சியும், மே 2-ந் தேதி இரவு கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடைபெறும்.

    அழகி போட்டியில் பங்கேற்க திருநங்கைகள் புதுவை, தமிழகம் மட்டுமின்றி மும்பை கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.

    இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 3-ந் தேதி காலை 9.30 மணிக்கு நடக்க உள்ளது மாலை 4.30 மணிக்கு அழுகள நிகழ்ச்சியும், மே 18-ந் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    Next Story
    ×