என் மலர்
புதுச்சேரி

கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரி 20-வது ஆண்டு விழா நடைபெற்ற காட்சி.
கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரி 20-வது ஆண்டு விழா
- கடந்த 20 ஆண்டு காலமாக நடந்த கல்லூரியின் சிறப்பு குறித்து புத்தகம் வெளியிடப்பட்து.
- பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.
புதுச்சேரி:
பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் அங்கமான கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் 20ம் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் புனிதா ஜோஸ்பின்வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் பேரவையின் பதிவாளர்
ஆனாகிரேஸ் கலைமதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பேராசிரியர் கிருபா ஏஞ்சலன் கல்லூரியின் 20 வருட முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மேலும், கடந்த 20 ஆண்டு காலமாக நடந்த கல்லூரியின் சிறப்பு குறித்து புத்தகம் வெளியிடப்பட்து.
தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள், சேவையாற்றிய மாணவர்களுக்கும் விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவமனை சுகாதாரம் மற்றும் அவுட் ரீச் சேவை பிரிவு இயக்குனர் பேராசிரியர் நிர்மல்குமார், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் கோஷ், பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.






