என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை புதுவை அரசு ஓராண்டு கொண்டாட வேண்டும்
- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்திர காந்தி சதுக்கம் தொடங்கி வில்லியனூர் வரை புதுவை-விழுப்பு சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஆணை வெளியிட வேண்டும்.
புதுவை அரசு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். வில்லியனூரில் கருணாநிதிக்கு சிலை அமைத்து நினைவு ஆய்வு மணிமண்டபம் அமைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருணாநிதி குறித்து பேச்சு-கட்டுரை போட்டிகள் அரசின் சார்பில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






