என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டு கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு பதவி ஏற்பு
    X

    காலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய நிர்வாகிகள் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    காலாப்பட்டு கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு பதவி ஏற்பு

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ பங்கேற்பு
    • மேலாளருக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களில் கையெழுத்திட்டார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி யில் உள்ள காலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியின் புதிய நிர்வாக குழு பதவி ஏற்பு விழாவில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.

    காலப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியின் புதிய நிர்வாக குழு அமைக்க கூட்டுறவு துறை இயக்குனர் யஸ்வந்தையா உத்தரவின் பேரில் புதிய நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டது.

    அதன்படி காலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியின் தலைவராக தங்கவேல் என்ற பெரி யண்ணன், இயக்குனர்களாக கண்ணன் என்கிற குண சேகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப் பட்டனர்.

    பெரிய காலாப்பட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியில் நடந்த பதவி ஏற்பு விழாவில் வங்கி மேலாளர் பூபாலன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவினருக்கு பதவியேற்பு செய்து வைத்தார்.

    கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக பொறுப்பேற்ற தங்கவேல் என்கிற பெரியண்ணன் 3 தீர்மானங்களில் கையெழுத்திட்டார்.

    அதன்படி, புதிய நிர்வாகி கள் பதவி யேற்பு, காலாப் பட்டு கூட்டுறவு சங்க கடன் வங்கியில் காசோலையில் கையெழுத்திட வங்கி மேலாளர் மற்றும் தலைவ ருக்கு அதிகாரம் வழங்குதல், கூட்டுறவு சங்கத்தில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு ஆகியவற்றை வரவு செலவு செய்தல், கூட்டுறவு வங்கி யின் மூலம் தனியார் வங்கி யில் உள்ள வரவு செலவு ஆகியவற்றை பராமரிப்ப தற்கு தலைவர் மற்றும் மேலாளருக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களில் கையெழுத்திட்டார்.

    நிகழ்ச்சியில் காலாப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் காலாப்பட்டு, கருவடிக்குப்பம், ஆலங் குப்பம், முத்தியால்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதவி மேலாளர் தங்கராசு நன்றி கூறினார்.

    Next Story
    ×