என் மலர்
புதுச்சேரி

கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய காட்சி.
கண்ணில் கருப்புத்துணி கட்டி கூட்டு நடவடிக்கை குழு தர்ணா
- புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
- தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், சேதுசெல்வம், ஐ.என்.டி.யூ.சி. சொக்கலிங்கம், ஞானசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. பழனி, ஆறுமுகம், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், முருகன், பெருமாள், எல்.எல்.எப். செந்தில், மனீத், கோவிந்தராஜ், எம்.எல்.எப். வேதாவேணுகோபால், அரசு ஊழியர் சம்மேளனம் ராதாகிருஷ்ணன், மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு ஆலோசகர் ராமசாமி, தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணில் கறுப்புத்துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில், புதுவை மின்துறையை தனியார்மயாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






