என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசின் முடிவை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும்-அன்பழகன் கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    மத்திய அரசின் முடிவை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும்-அன்பழகன் கோரிக்கை

    • மத்தியில் 1989-ல் பா.ஜனதா ஆட்சியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
    • மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் 1989-ல் பா.ஜனதா ஆட்சியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது மத்தியில் பா.ஜனதாஆட்சி உள்ளதால் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பா.ஜனதாவின் கடமையாகும்.

    மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.

    மாநில அந்தஸ்து என்பது நம் உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம் தி.மு.க.வும், காங்கிரசும் போலித்தனமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றாமல் மாநில மக்களை நலனுக்காக அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×