என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பாண்லே பால் பொருட்கள் விற்பனை நிலையம் மூடி கிடக்கும் அவலம்
- பொதுமக்கள் அவதி
- அதிகாரிகள் பார்வையிட்டு பால் விற்பனையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை இந்திரா நகர் எதிரில் பாண்லே நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இங்கு பொது மக்களுக்கு தேவையான பால், நெய், தயிர், பாதாம்பால், பால்கோவா, மோர், ரொட்டி கேக்குகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்து வந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்த விற்பனை நிலையத்தில் தினந்தோறும் அதிகப்படியான வருவாயை கொடுத்து அதிக அளவில் பால் பொருட்கள் விற்பனையும் ஆனது.
இந்நிலையில் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக பாண்லே விற்பனை நிலையம் சாலையின் ஓரத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டது.
அதன் பின்பு கடந்த 6 மாத காலமாக ஒரு சில காரணத்தினால் பாண்லே விற்பனை நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், பால் மொத்த விற்பனை யாளர்கள், டீக்கடைக் காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், உள்ளிட் டோர் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.
தற்போது மூடி உள்ள இந்த பாண்லே பால் விற்பனை நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு பால் விற்பனையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்