என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் சர்வதேச செவிலியர் தின விழா நடைபெற்ற காட்சி.
சர்வதேச செவிலியர் தின விழா
- மணக்குள விநாயகர் கல்லூரியில் நடைபெற்றது.
- ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலைவேந்தன் சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள கல்வி அறக்கட்டளை, மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரி இணைந்து சர்வதேச செவிலியர் தின விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் முத்தமிழ் செல்வி வரவேற்றார். ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலைவேந்தன் சிறப்புரையாற்றினர்.
இயக்குனர் ராஜ கோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் கார்த்திகேயன், ஆராய்ச்சி டீன் கலைசெல்வன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், செவிலியர் கண்காணிப்பாளர் கிரீட்டா குணசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பேராசிரியர்கள், செவிலிய மாணவ-மாணவிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின், பல்வேறு போட்டிகளில் வென்ற செவிலியர்கள், மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி செவிலிய கண்காணிப்பாளர் லீணா கிரேகஸ் நன்றி கூறினார்.






