search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரும்பார்த்தபுரம்  பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்
    X

     சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்ற காட்சி.

    அரும்பார்த்தபுரம் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்

    • பள்ளியின் 38-ம் ஆண்டின் விளையாட்டு விழா வினையும் கொண்டாடும் பொருட்டு 38 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
    • ஒலிம்பிக் கொடியை ஏற்றி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 38-ம் ஆண்டிற்கான விளையாட்டு பெருவிழாவினை பள்ளியின் ப்ளூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அரேனா ஏற்பாடு செய்திருந்தது.

    விழாவில் இந்திய நாட்டின் 76-ம் ஆண்டு சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் விதமாகவும், பள்ளியின் 38-ம் ஆண்டின் விளையாட்டு விழா வினையும் கொண்டாடும் பொருட்டு 38 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் 38 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி

    னார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் புளு ஸ்டார்ஸ் பள்ளியின் கொடியை ஏற்றினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பளு தூக்கும் போட்டியில் ஆசிய விருது பெற்ற யோகேஷ் கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

    விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விளை யாட்டின் அவசியத்தையும் அதன் பயனையும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×