search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நாவர்குளம் இளைஞர்கள் சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு
    X

    நாவற்குளத்தில் நீர், மோர் பந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    நாவர்குளம் இளைஞர்கள் சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு

    • புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலை நாவற்குளத்தில் இளைஞர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலை நாவற்குளத்தில் இளைஞர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளம் இளைஞர்கள் சார்பில் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில் கோடை காலத்தையொட்டி நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    இதில், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி துணைத் தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாவற்குளம் வார்டு உறுப்பினர் நவநீத் என்ற நவநீதகிருஷ்ணன், வசந்தபுரம் வார்டு உறுப்பினர் கணேசன், உதயராஜ், நரேஷ்,நகுல், சுந்தரமூர்த்தி, சாமி, ஆகாஷ், ரமேஷ் உள்ளிட்ட நாவர்குளம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    நீர் மோர்- பந்தல்ஏற்பாட்டினை சிங்காரவேல் செய்திருந்தார்.

    Next Story
    ×