என் மலர்
புதுச்சேரி

கோலமாவில் காமராஜர் உருவம் வரைந்த காட்சி.
கோலமாவில் காமராஜர் உருவம்
- புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி. நுண்கலைஓவியத்தில் பட்டம் பயின்றவர்.
- ஒவியர் அறிவழகி தேச தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது உருவத்தை ஒவியமாக வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி.
நுண்கலைஓவியத்தில் பட்டம் பயின்றவர். ஒவியர் அறிவழகி தேச தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது உருவத்தை ஒவியமாக வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஏற்கனவே மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜெயலலிதா, முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதர் தெரேசா, பெரியார், மகாகவி பாரதியார், இந்திராகாந்தி ஆகியோர் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் காமராஜரின் பிறந்தநாளை யொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓவியர் அறிவழகி 6 அடி உயரம் 4 அடி அகலத்தில் 4 கிலோ கோலமாவை கொண்டு காமராஜரின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.
5 மணி நேரத்தில் ஒவியத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
காமராஜர் ஓவியத்தை பொதுமக்கள் பார்த்து அறிவழகிக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
Next Story






