search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிப்பு
    X

    சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசின் நில அளவை பதிவேடுத்துறை இயக்குனர் ரமேஷ் தலைமையில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தியாகிகளுக்கு பழக்கூடை மற்றும் பொருட்கள் வழங்கிய காட்சி.

    சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிப்பு

    • இதனையொட்டி புதுவையில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரப்படுத்தப்படுகிறார்கள்.
    • புத்தாடை அணிவித்து அவர்களுக்கு பழக்கூடை மற்றும் பொருட்களை வழங்கினர்.

    புதுச்சேரி:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுவையில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரப்படுத்தப்படுகிறார்கள். அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த தியாகிகள் கிருஷ்ணராஜ்(வயது88) மற்றும் சுப்புராயலு(97) ஆகிய இருவரையும் புதுவை அரசின் நில அளவை பதிவேடுத்துறை இயக்குனர் ரமேஷ் தலைமையில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. 2 தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சந்தன மாலை மற்றும் புத்தாடை அணிவித்து அவர்களுக்கு பழக்கூடை மற்றும் பொருட்களை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன் மற்றும் தியாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×