என் மலர்
புதுச்சேரி

இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பெயர் பட்டியல் அடங்கிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்ற காட்சி.
மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா
- முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை மாவட்டத்திலேயே முதன் முதலாக மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் சிவகாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு கையேட்டை வழங்கினார்.
புதுச்சேரி:
முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை மாவட்டத்திலேயே முதன் முதலாக மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா, அறிவியல் கண்காட்சி, குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட மாணவருக்கு பரிசளிப்பு விழா மற்றும் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் அடங்கிய பெயர் பலகை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் சிவகாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்க ளுக்கு கையேட்டை வழங்கினார்.
முன்னதாக பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பெயர்பட்டியல் அடங்கிய பலகையை திறந்து வைத்தார். பள்ளியின் பொறுப்பாசிரியை பாக்கி யலட்சுமி நன்றி கூறினார்.
பட்டதாரி ஆசிரியை வாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






