என் மலர்
புதுச்சேரி

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜாவுக்கு கல்லூரியின் இயக்குனர் செந்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் பயிற்சி குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.மற்றும் வேலை வாய்ப்பு துறை இணைந்து நடத்திய சிவில் சர்வீஸ் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டிவனம் சப்-கலெக்டர் கலந்துகொண்டு பேசினார்.
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் மருத்துவர் நாரயணசாமி மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் பேசினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த வழிகாட்டு தல்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து துறையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள் சார்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் இயல்பான பாணியில் விளக்கிக்கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவர் கலைவாணி ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.






