என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காவலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்

    காவலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • மது குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தேங்காய்த்திட்டு நேரு நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாரி செல்வன்(வயது56). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்

    புதுச்சேரி:

    மது குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை தேங்காய்த்திட்டு நேரு நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாரி செல்வன்(வயது56). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பாரிசெல்வம் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வார். கடந்த 2 மாதமாக இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

    அதுபோல் பாரிசெல்வம் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், மணிமேகலை பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து மொட்டை மாடிக்கு தூங்க செல்வதாக பாரி செல்வம் கூறி சென்றார். மணிமேகலை டீ தயாரித்து கணவருக்கு கொடுக்க மாடிக்கு சென்றார். அப்போது அங்குள்ள அறையில் மின்விசிறி கொக்கியில் கணவர் வேட்டியால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் பாரிசெல்வம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து மணிமேகலை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×