search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜி.எஸ்.டி. இழப்பீடை மேலும்  5 ஆண்டுகள்  நீட்டிக்க வேண்டும்-அமைச்சர் லட்சுமிநாராயணன்
    X

    கோப்பு படம்.

    ஜி.எஸ்.டி. இழப்பீடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்-அமைச்சர் லட்சுமிநாராயணன்

    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் காணொலியில் நடந்தது.
    • கூட்டத்தில் நீர்மோட்டார், சமையல் செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள், ஷார்ப்னர் ஆகியவற்றின் வரியை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் காணொலியில் நடந்தது.

    கூட்டத்தில் புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், வணிக வரித்துறை ஆணையர் ராஜசேகர் பங்கேற்றனர். கூட்டத்தில் நீர்மோட்டார், சமையல் செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள், ஷார்ப்னர் ஆகியவற்றின் வரியை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது பேசிய அமைச்சர் லட்சுமி நாராய ணன், புதுவை விவசயிகள் நலனை கருத்தில் கொண்டு சமையல் உபகரணங்கள் வரியை 12 சதவீதமாக வசூலிக்கவும், மாநில நிதி பற்றாக்குறையை கவத்தில் கொண்டு மத்திய அரசு அளித்து வரும்

    ஜி.எஸ்.டி. இழப்பீடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    Next Story
    ×