என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் உரை முன்னுக்கு பின் முரணாக உள்ளது-வைத்தியநாதன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கோப்பு படம்.

    கவர்னர் உரை முன்னுக்கு பின் முரணாக உள்ளது-வைத்தியநாதன் எம்.எல்.ஏ. பேச்சு

    • கவர்னர் உரை என்பது மகத்துவமாக இருக்க வேண்டும். முன்னுக்கு பின் முரணாக இருக்க கூடாது.
    • கவர்னர் உரையில் கொடுத்துள்ள தனி நபர் வருமான கணக்கை பார்த்தால் புதுவையில் வறுமையே இல்லை என்பதாகத்தான் அர்த்தம்.

    புதுச்சேரி:

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் பேசிய தாவது:-

    கவர்னர் உரை என்பது மகத்துவமாக இருக்க வேண்டும். முன்னுக்கு பின் முரணாக இருக்க கூடாது. இலக்கிய கருத்தரங்கம் போல கவர்னர் உரை இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. தொழிற்சாலையே இல்லாத மாநிலத்தில் தொழிலே வாழி என கூறுகிறீர்கள். எந்த பாடலை வைத்தும் உரைக்கு மெருகேற்ற முடியாது.

    யானை பசிக்கு சோளப்பொறி போன்றதே இந்த பட்ஜெட். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது 22 சதவிகிதமான புதுவை வளர்ச்சி இருந்தது. ஆனால் 4,9 சதவிகித வளர்ச்சியை பெருமையாக பேசி வருகிறீர்கள்.கவர்னர் உரையில் கொடுத்துள்ள தனி நபர் வருமான கணக்கை பார்த்தால் புதுவையில் வறுமையே இல்லை என்பதாகத்தான் அர்த்தம்.

    எனவே கவர்னர் உரையில் கொடுத்துள்ள தனி நபர் வருமான கணக்கே தவறு.

    ரேஷன் கடை திறப்பதாக உறுதி அளித்தீர்கள். ஆனால் திறக்கப்படவில்லை. பாரதியார் உணவு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் பொருளை கொடுக்க வேண்டும் என கூறவில்லை. எனவே ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை கொடுக்க வேண்டும். விவசாய துறையில் நிதி சரியாக செலவிடப்படவில்லை.

    காரைக்கால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது யாரும் சென்று பார்க்கவில்லை பான்லே நஷ்டத்தில் இயங்கி வருவது குறித்து எதுவும் கூறவில்லை. அரியூர் பகுதியில் பால்பண்ணை தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் உரையில் இல்லை. லிங்காரெட்டிப்பாளையம், பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

    கலைமாமணி, தெலுங்கு ரத்தனா அறிவிப்பு இல்லை. வீடுகளில் கொடி ஏற்றியதை சாதனையாக கூறுகிறீர்கள். புதுவை மக்கள் எப்போதும் நாட்டு பற்றுடன் தான் இருப்பார்கள். அதனை உரையில் கூறியுள்ளீர்கள். செல்ல வேண்டிய விவரங்களை சொல்லியிருக்கலாம். ஜி20 மாநாட்டினால் புதுவைக்கு என்ன பயன். வழிநெடுகிலும் காவி பெயிண்ட் அடித்தீர்கள். கால்நடைத்துறையில் ஒதுக்கப்பட்ட நிதி சரியாக செலவு செய்யப்படவில்லை.

    கல்வித்துறையில் 802 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள். அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்ற விவரம் இல்லை.

    மின்துறைக்கு டெண்டர் விட்டுள்ளீர்களா என்ற விவரம் இல்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மதுவை தவிர வேறு எதுவும் சுற்றுலா வில் இல்லை. இ.சி.ஆரில் பெண்களுக்கென தனியாக ரெஸ்ட்டோபார் வைத்துள்ளார்கள். இவை கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.

    இதனை அனுமதிக்க கூடாது. மாநில அந்தஸ்து குறித்து கவர்னர் எதுவும் கூறவில்லை. வெற்று உரையை வைத்துக்கொண்டு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்க சொன்னால் என்ன தெரிவிப்பது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×