search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரெயில்வே அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை
    X

    கோப்பு படம்.

    ரெயில்வே அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை

    • சென்னை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.
    • சென்னை கடலுர் வழித்தட ரெயில் சேவை திட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.

    அப்போது புதுவை ரெயில்நிலையம் சேவை மேம்பாடு, புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் சிற்ப அரங்கு அமைப்பது, வழிபாட்டு தலங்களுக்கு ரெயில்சேவை, வில்லியனூர் ரெயில்நிலைய மேம்பாடு, மகாபலிபுரம் வழியாக சென்னை கடலுர் வழித்தட ரெயில் சேவை திட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

    சேவை மேம்பாட்டு பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும்படி கவர்னர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலர்கள் முத்தம்மா, மணிகண்டன், அபிஜித்விஜய்சவுத்ரி, கலெக்டர் வல்லவன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×