search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்
    X

    8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

    • மத்திய அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது தேசிய பெண் குழந்தைகள் கொண்டாடுகிறது.
    • இதில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது தேசிய பெண் குழந்தைகள் கொண்டாடுகிறது.

    அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் பேரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியதுவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் அமலோற்பவம் மேல்நிலை ப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    இக்கருத்தரங்கம் 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்காக நடைபெற்றது.

    இந்த வயதில் உள்ள பெண் குழந்தைகள் தங்களின் பாதுகாப்பற்ற சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வை சிறப்பு விருந்தினர் வித்யாராம்குமார் தனது உரையில் எடுத்துரைத்தார்.

    Next Story
    ×