என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு கை கடிகாரம் பரிசு
    X

    மாணவர்களுக்கு கை கடிகாரம் பரிசு வழங்கிய காட்சி.

    மாணவர்களுக்கு கை கடிகாரம் பரிசு

    • இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் கைக்கடிகாரம் வழங்கி கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் கைக்கடிகாரம் வழங்கி கவுரவித்தார்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×