என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி
- மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
- பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
இந்த சாலையை விவசாய நிலத்திற்கு செல்லும் வழியாகவும் பல்வேறு செயல்பாட்டுக்கு இந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது சாலை நடுவே நீண்ட தூரம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்து குப்பையில் இருந்து பூழுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.
பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்