என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
    X

    தெரு நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்த படம்.

    தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

    • புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு மையம் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • தெரு நாய்களுக்கு பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் ரேபிஸ் நோய் தாக்காமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு மையம் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    புதுவை உருளையான்பேட்டை ராஜாநகரில் முகாமை புதுவை பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி தொடங்கி வைத்தார். அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் ரேபிஸ் நோய் தாக்காமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் செல்லப்பி–ராணிகளை தோல் நோயிலிருந்து காப்பாற்ற சிகிச்சை மற்றும் அதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×