என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
இலவச பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்- செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விடம் மனு
புதுச்சேரி:
பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள் செந்தில் குமார் எம்.எல்.ஏ,வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் படிக்கும் மாணவ மாணவிகள் பயணிப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து நிரந்தரமாக பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மாணவ-மாணவிகளுக்கு வழங்கப் படும் சீருடைகள் காலத்தோடு வழங்கப்படவில்லை அந்த சீருடைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முட்டை வழங்கப்படுவதில்லை அதையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ., இது குறித்து கல்வி துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை இயக்குனரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்