என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி
- திருபுவனை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாகி விட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாகி விட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருபுவனை அருகே மதகடிப்பட்டு கோகுலம் நகரை சேர்ந்தவர் முகமது இம்தியாஸ் (வயது27). இவர் மதகடிபட்டில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் கபில் என்பவரும் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த குமார் (60) என்பவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.
இதற்கிடையே குமார் ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் வசித்த வீட்டை விற்று விட்டு சமீப காலமாக மதகடிப்பட்டு பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
சுமார் ரூ.20லட்சம் வரை குமார் ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திடீரென வாடகை வீட்டையும் காலி செய்து விட்டு குமார் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து முகமது இம்தியாஸ் திருபுவனை போலீஸ் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குமாரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்