என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
5-ஜி சேவை பெயரில் மோசடி
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- 5-ஜி சேவைகளை இயக்கவும், சிம்கார்டை மேம்படுத்தவும் டெலிகாம் நிறுவனங்களின் ஓ.டி.பி. நம்பரை கேட்பதில்லை.
புதுச்சேரி:
புதுவையில் ஆன்லைனில் மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது 5-ஜி சேவைகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச் சரித்துள்ளனர். 5-ஜி சேவைகளை இயக்கவும், சிம்கார்டை மேம்படுத்தவும் டெலிகாம் நிறுவனங்களின் ஓ.டி.பி. நம்பரை கேட்பதில்லை.
ஆனால் ஏமாற்று பேர்வழிகள் டெலிகாம் நிறுவனங்களில் பேசுவதாக கூறி ஓ.டி.பி. பின் நம்பரை பெற்று மோசடி நடத்த தொடங்கியுள்ளனர்.
எனவே தனிப்பட்ட விபரங்களை யாருடனும் பகிர வேண்டாம். 5-ஜி சேவை மேம்பாடு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story






