என் மலர்
புதுச்சேரி

வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்கள் பெண்கள்.
பறவைகளை வேட்டையாடிய நரிக்குறவர்கள்- அதிகாரியுடன் வாக்குவாதம்
- வில்லியனூர் பத்துகண்ணு சாலையில் உள்ள நரிக்குறவர்கள், வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களுக்காக ஊசுடு ஏரியில் பென்குயின், பிளமிங்கோ உள்ளிட்ட உள்நாட்டு அரிய வகை பறவைகள் வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர்.
- அப்போது வனத்துறை அதிகாரிகளிடம் நரிக்குறவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் பத்துகண்ணு சாலையில் உள்ள நரிக்குறவர்கள், வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களுக்காக ஊசுடு ஏரியில் பென்குயின், பிளமிங்கோ உள்ளிட்ட உள்நாட்டு அரிய வகை பறவைகள் வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கவும், பச்சை கிளிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுநல ஆர்வலர்களிடமிருந்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நரிக்குறவர்களிடம் வனத்துறை மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்படுகின்றன.
இந்நிலையில் இன்று வனத்துறையின் வன பாதுகாப்பு துணை இயக்குனர் குமரவேல், வேளாண் அதிகாரி பிரபாகரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஊசுடு ஏரி பகுதிக்கு சென்று அங்கு வேட்டையாடப்பட்டு வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது வனத்துறை அதிகாரிகளிடம் நரிக்குறவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பண பாதுகாப்புத்துறை துணை இயக்குனர் குமரவேலு கூறியதாவது:-
ஊசுடு ஏரிக்கு வரும் அரியவகை பறவைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு சிலர் மாமிசத்திற்காக நரிக்குறவர்களிடம் சென்று குறிப்பிட்ட பறவைகளைக் கேட்கும் பொழுது அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். எனவே அறிய வகை பறவை இனத்தைச் சேர்ந்த பறவைகளை உணவுக்காக கேட்க வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






