search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாகூர் தொகுதி கிராமங்களில் அன்னதானம்
    X

    குருவிநத்தத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் நினைவு நாளையொட்டி எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பாகூர் தொகுதி கிராமங்களில் அன்னதானம்

    • பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தந்தை மற்றும் பழைய குருவிநத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமநாதன் மறைவையொட்டி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
    • மேலும் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தி.மு.க. மற்றும் ஆர்.ஆர். பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தந்தை மற்றும் பழைய குருவிநத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமநாதன் மறைவையொட்டி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    இதில் புதுவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ராமநாதன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அன்னதானம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பாகூர் தொகுதி பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குருவிநத்தம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.

    மேலும் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தி.மு.க. மற்றும் ஆர்.ஆர். பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×