search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செங்கழுநீர் அம்மன் கோவிலில் கொடியேற்ற விழா
    X

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.

    செங்கழுநீர் அம்மன் கோவிலில் கொடியேற்ற விழா

    • மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது
    • இந்த கோவிலில் ஆடி மாத தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித் தேரோட்டம் வரும் ஆகஸ்டு 19-ம் தேதி காலை நடக்கிறது.

    அதனை முன்னிட்டு (வியாழக்கிழமை) காலை 5.15 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக 10-ந் தேதி மாலை 6 மணி அளவில் விநாயகர் பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினசரி இரவு நேரங்களில் அம்மன் விதியுலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந் தேதி காலை நடைபெற உள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். 20-ந் தேதி இரவு 9 மணி அளவில் தெப்பல் உற்சவமும், 26-ந் தேதி இரவு 10 மணியளவில் சிறப்பு முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×