search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1.80 ஆயிரம் நிதி உதவி
    X

    வீடுகளை இழந்த பொது மக்களுக்கு நிதியுதவியை சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார். அருகில் யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ உள்ளார்.

    வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1.80 ஆயிரம் நிதி உதவி

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியிருப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
    • இதனையறிந்து, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, தனது நிர்வாக குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியிருப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    இதனால், அங்கு வசித்து வந்த 18 குடும்பத்தினர் வீடு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையில் அவர்கள் தற்காலிகமாக சமுதாய நலக்கூடத்தில் தங்கியுள்ளனர்.

    இதனையறிந்து, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, தனது நிர்வாக குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி 18 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 70 பேர்களுக்கு இரவு உணவு, பால், பிஸ்கட், தண்ணீர், பாய் மற்றும் தலையனை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அவர்களுக்கு யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் 3 வேளை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இதுகுறித்து நிறுவனர் கிருஷ்ணராஜூ முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்தை சந்தித்து பேசியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ முன்னிலை யில் சம்பத் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்ப ங்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யுவர் பேக்கர்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×