என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தீபாவளி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து
- தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.
- ஒளிர்வதுபோல உங்கள் வாழ்வு ஒளிரட்டும், மகிழ்ச்சி தங்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை யொட்டி புதுவை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை யும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.
இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தீபாவளி பண்டிகை மதம், புவியியல் எல்லைகளை கடந்து பல்வேறு கலாச்சார, பாரம்பரிய மரபுகளை பின்னணியாக கொடாட மக்களை ஒன்றிணைக்கிறது.
தேசத்தின் துடிப்பான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் இந்த தீபாவளி பண்டிகையின்போது உங்கள் அனைவரது இல்லங்களிலும் ஏற்றப்படும் தீபங்கள் ஒளிர்வதுபோல உங்கள் வாழ்வு ஒளிரட்டும், மகிழ்ச்சி தங்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இருள்நீக்கி ஒளியை ஏற்றிடும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகவும், வேற்றுமை மறந்து ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம். அனை வருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை நாள் மக்களுக்கு எல்லை யில்லாத மகிழ்ச்சியையும், வெற்றியையும், ஆரோக்கி யத்தையும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன்.
தீப ஒளி எனும் தீபாவளி திருநாள் அனைவர் வாழ்வும் வளர்ந்து மகிழ்வூட்ட வேண்டும். தீபங்கள் ஒளி வெள்ளத்தில் மூத்தோர்களின் வழியில், நன்மைகள் நிறைந்திட புதிய வழி பிறக்க தாங்கள் எல்லா வளமும் பெற இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மக்கள் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டா டும் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இதுபோல் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், வையாபுரி மணி கண்டன், அனந்தராமன் பா.ம.க. அமைப்பாளர் கணபதி, அ.ம.மு.க. மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, மக்கள் பாதுகாப்பு பேரி யக்கம் கராத்தே வளவன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்