என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டுறவு கடன் கிடைக்காததால் விவசாயிகள் அவதி
    X

    கோப்பு படம்.

    கூட்டுறவு கடன் கிடைக்காததால் விவசாயிகள் அவதி

    • அன்பழகன் பேட்டி
    • அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடப்பு கல்வ ஆண்டிலேயே இட ஒதுக்கீடை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ க்கல்வியில் புதுவை அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடை இந்த ஆண்டே வழங்க முதல்-அமைச்சர் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    சென்டாக் மூலம் உத்தேச தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளி மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடப்பு கல்வ ஆண்டிலேயே இட ஒதுக்கீடை வழங்க வேண்டும்.

    இதற்காக தலைமை செயலர், அரசு செயலரை மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டுத்து றைக்கு நேரில் அனுப்பி 5 நாட்களுக்குள் உள் ஒதுக்கீடை பெறவேண்டும்.

    அதன்பிறகு சென்டாக் கவுன்சிலிங் நடத்த வேண்டும். இதில் எந்த சமரசத்து க்கும் அரசு இடம் தரக்கூடாது.

    பருவம் தவறி பெய்த பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி நிவா ரணம் அறிவித்தி ருந்தார். பல மாதமாகியும் இந்த நிவாரணம் வழங்கவில்லை. இதைஉட னடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் ரூ.14 கோடியை அரசு தள்ளுபடி செய்தது. அந்த கடனுக்கான தொகையை கூட்டுறவு வங்கிக்கு திருப்பி செலுத்தவில்லை. இதனால் புதிதாக விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியால் கடன் வழங்க முடியவில்லை.

    இது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரட்டை குடியுரிமை பிரச்சினை பூதாகரமாகி யுள்ளது. ஒரு சிலர் திட்டமிட்டு இந்த விவகாரத்தை பெரிதுப டுத்துகின்றனர். மத்திய அரசு துறை, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 2 அல்லது 3 ஆண்டு பணியாற்றினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது.

    மேலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் குடியுரிமை வழங்கப்படும் விதிகள் வேறுவிதமாக உள்ளது. இதில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் 1996-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் வேறு எங்கு படிக்க முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×