என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு-பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு-பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் கோரிக்கை

    • தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசும் சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்படுவதை அரசு அறியுமா?
    • பொது அறிவை வெளிப்படுத்த தயக்கம் உள்ளது. அவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்பு நடத்தினால் எளிதில் ஆங்கிலத்தில் பேசுவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    வி.பி. ராமலிங்கம்(பா.ஜனதா): தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசும் சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்படுவதை அரசு அறியுமா? அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புகள் எடுக்கும் திட்டம் உள்ளதா?

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: ஏற்கனவே ஆரம்பக்கல்வி அறிவை வளர்ப்பது என்பது உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

    வி.பி. ராமலிங்கம்: தனியார் பள்ளி மாணவர்களோடு ஒப்பிடும்போது, அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச தடுமாறுகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு, பொது அறிவை வெளிப்படுத்த தயக்கம் உள்ளது. அவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்பு நடத்தினால் எளிதில் ஆங்கிலத்தில் பேசுவார்கள். முதல்-அமைச்சர் ரங்கசாமி: மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாஜிம்(தி.மு.க.): 10 ஆண்டு முன்பே சி.பி.எஸ்.இ. வகுப்பு தொடங்கும்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை என தெரிவித்தேன். தற்போது 6-ம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.இ. தொடங்க உள்ளீர்கள். எனவே ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: நமது ஆசிரியர்கள் திறமையானவர்கள், தகுதி யானவர்கள், அவர்களால் சி.பி.எஸ்.இ. அளவில் வகுப்புகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×