என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நடுக்கடலில் மூழ்கி என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் பலி
    X

    விக்னேஷ்

    நடுக்கடலில் மூழ்கி என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் பலி

    • நடுக்கடலில் மூழ்கி பலியான என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் உடல் கரை ஒதுங்கியது.
    • தனியார் என்ஜினீரியங் கல்லூரியில் படித்து வந்தார்.

    புதுச்சேரி:

    நடுக்கடலில் மூழ்கி பலியான என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் உடல் கரை ஒதுங்கியது.

    புதுவை மடுவுப்பேட் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் விக்கி என்ற விக்னேஷ் (வயது19). இவர் மூலக்குளத்தில் உள்ள தனியார் என்ஜினீரியங் கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய கல்லூரி நண்பர் டேனியல். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாளாகும்.

    இதையடுத்து டேனியல் தனது பிறந்தநாளை நடுக்கடலில் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி சோலைநகர் பகுதியை சேர்ந்த நண்பர் மாதேஷ் உள்பட 12 பேருடன் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து ஒரு பைபர் படகில் கடலுக்கு சென்றனர்.

    நடுக்கடலில் படகை நிறுத்தி அவர்கள் கேக்வெட்டி மது அருந்தி பிறந்தநாளை கொண்டா டியதாக கூறப்படுகிறது.

    அப்போது உற்சாக மிகுதியில் மாதேஷ், விக்னேஷ் உள்பட 3 பேர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் கடலில் மூழ்கினர். இதனை பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாதேஷ் மற்றும் ஒருவரை மீட்டனர். ஆனால் விக்னேசை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து படகில் சென்று விக்னேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதில் பலன் கிடைக்கவில்லை. விக்னேஷ் கடல் அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்பட்டதால் அவரது உடலை நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. ஆனால் உடல் கிடைக்கவில்லை

    இந்தநிலையில் இன்று காலை புதுவை தலைமை செயலகம் எதிரே விக்னேஷ் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விக்னேசை நம்பிய அவரது குடும்பத்தினர் இருந்த நிலையில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் கடலில் மூழ்கி பலியானதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    Next Story
    ×