search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. உருவ பொம்மை எரிப்பு
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. உருவ பொம்மை எரிப்பு

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசிய ஏனாம் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்தப் போராட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கோட்டைமேடு கதிர், கணுவாபேட்டை ஆனந்த சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசிய ஏனாம் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வில்லியனூர் அடுத்த மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து உருவபொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில்

    என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கோட்டைமேடு கதிர், கணுவாபேட்டை ஆனந்த சங்கர், பொன் சுகுமார், தேவா, ஆச்சார்யாபுரம் மணிகண்டன், உறுவையாறு அழகர், திருகாஞ்சிபேட் அங்கப்பன், கலியமூர்த்தி, முருகேசன், ஆனந்தபுரம் ராஜாராம், அரியூர் பிரபா, திருமலைவாசன், பாரதி, ராஜேஷ், மகளிர் அணி பிரபாவதி, ஹேமாவதி மற்றும் தொகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×