search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் -அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் -அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை.
    • இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக் கீரப்பா ளையம், நேதாஜிநகர், உடையார் தோட்டம், பெரிய பள்ளி, வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் சமூக விரோதிகள் சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனர். ஆகையால் அப் பகுதியில் மின் விளக்குகள் அமைத்து அதற்கான சுவிட்சை அங்காளம்மன் கோவில் தெருவில் வைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. மின் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று நகர செயற்பொறியாளர் கனிய முதனிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும், ஹைமாஸ் விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து உடனடியாக நடவடி க்கைகள் மேற்கொண்டு மின் விளக்குகளை சீரமை ப்பதாக செயற்பொறி யாளர் உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவரணி விநாயகம், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×