search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்வித்துறை ரூ.40 ½ லட்சம் நிதி ஒதுக்கீடு
    X

    கோப்பு படம்

    கல்வித்துறை ரூ.40 ½ லட்சம் நிதி ஒதுக்கீடு

    • மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்க்கவும், புத்தகம் வாங்கவும் நூலக மானியம் வழங்கப்படுகிறது.
    • அரசு பள்ளிகளுக்கு நூலகங்களை வலுப்படுத்த ரூ.40.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    சமக்ரா சிக்ஷா மத்திய நிதியுதவி திட்டத்தில் அனைத்து வயது மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்க்கவும், புத்தகம் வாங்கவும் நூலக மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த கல்வியாண்டில் 47 நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரம் வீதம் ரூ.6.11 லட்சம், 233 தொடக்க பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.11.65 லட்சம், 9,10-ம் வகுப்பு வரை உள்ள 72 பள்ளி களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.10.8 லட்சம், 60 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சம் என மொத்தம் 412 அரசு பள்ளிகளுக்கு நூலகங்களை வலுப்படுத்த ரூ.40.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவலை புதுவை பள்ளி கல்வித்துறையின் சமக்ரா சிக்சா திட்ட இயக்குனர் தினகர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பான சுற்றறி க்கையும் அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×