என் மலர்
புதுச்சேரி

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி காட்சி.
திராவிடர் கழகம் கண்டனம்
- திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தலீத் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தந்தைபிரியன் வரவேற்றார். விஜயசங்கர் முன்னிலை வகித்தார். லோகு.அய்யப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழின், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தலீத் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுவையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா புழங்கி வருவதை போலீசார் தடுக்காமல் உள்ளதை கண்டித்தும், சீரழியும் பள்ளிகளை கண்டுகொள்ளாத கல்வித்துறையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.






