search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுகாதார ஊழியர்கள் வீடுதோறும் ஆய்வு
    X

      இந்திராநகர் தொகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

    சுகாதார ஊழியர்கள் வீடுதோறும் ஆய்வு

    • டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்ட மேட்டுப் பாளையம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சுகாதார குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகியுள்ளனர்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமி வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்ட மேட்டுப் பாளையம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சுகாதார குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து புதுவை முழுவதும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் நோணாங்குப்பம் பகுதியில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

    மாடிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை மூட வேண்டும், வீடுகளில் பயன்படுத்தாத பொருட் களில் தண்ணீர் தேங்கி–யுள்ளதை சுட்டிக்காட்டி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

    கொசு–வின் மூலம் டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படுவதாக அறிவுறுத்தி னர். மேலும் மைக் மூலம் பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×