search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மரக்கிளைகளை அப்புறப்படுத்த தி.மு.க. கோரிக்கை
    X

     வனத்துறை துணை இயக்குனரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்த  காட்சி.  

    மரக்கிளைகளை அப்புறப்படுத்த தி.மு.க. கோரிக்கை

    • வீடுகள் மீதும் மின் கம்பி மீதும் உராய்வதால் விபத்து ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது.
    • ரமேஷ் ,சேவியர், ஜெகதீசன், சரவணன், அர்ஜுனன், வெங்கடேசன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க.வினர் புதுவை வனத்துறை துணை இயக்குனரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர், கிணற்று வீதியில் உள்ள மரங்களில் மரக்கிளைகள் வளர்ந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மீதும் மின் கம்பி மீதும் உராய்வதால் விபத்து ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி றார்கள். எனவே அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், அருண், தொண்டரணி கருணா, கஸ்தூரிபாய் நகர் கிளை தலைவர் கலிய பெருமாள், செயலாளர் பிரான்சிஸ்,ஆதி, ரமேஷ் ,சேவியர், ஜெகதீசன், சரவணன், அர்ஜுனன், வெங்கடேசன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×