என் மலர்
புதுச்சேரி

எதிர்கட்சி தலைவர் சிவா முன்னிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.
தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்
- நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. சார்பில் லெனின் வீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது.
- கார்த்திகேயன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. சார்பில் லெனின் வீதியில் நீர் மோர் பந்தல் தலைமை பொதுக்குழு உறுப்பினரும் நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளருமான கார்த்திகேயன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் மோர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், கரும்புச்சாறு வெள்ள ரிக்காய், எலுமிச்சைச்சாறு, கிர்ணிப்பழச்சாறு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், தங்கவேல், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேலவன், டாக்டர் நித்தீஷ், தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், வடிவேல் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைபா ளர்கள் காயத்ரி, சுப்பிரமணி யன், வக்கீல் ஞானராஜன், மாநில பிரதிநிதி முருகன், நெல்லித்தோப்பு தொகுதி துணை செயலாளர்கள் கிருபாஷங்கர், சங்கீதா, செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், ஜெகதீசன், கிளை செயலாளர்கள் மூர்த்தி, பரிதிமாள், ஏழு மலை, கமல், பாலா, சின்ராசு, கருணாகரன், மணி, உலகநாதன், கிருஷ்ண குமார், செல்வம், ஸ்டாலின், முத்து, பிரான்சிஸ், ஹரி ஹரன், அவைத் தலைவர்கள் சேனாதிபதி, சின்ன கண்ணு, பாபு, பாஸ்கர் ஏழுமலை, ரவி, ரமேஷ், நிர்வாகிகள் அர்ஜுனன், ராஜி வெங்க டேசன், ரமேஷ் சரவணன், நாகராஜ் ராஜேந்திரன், நாச்சியார், விக்ரம், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பா ளர்கள் பரத், ஞானவேல், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மோர் பந்தல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பொதுமக்க ளுக்கு இலவசமாக குளிர்ந்த பொருட்கள் வழங்கப்படும்.






