search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகள்
    X

    கோப்பு படம்.

    மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகள்

    • போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
    • கிராமிய நடன போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகள் வருகிற ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பம் உள்வர்கள் பெரியார் நகர் 4-வது குறுக்கு தெரு சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப்பள்ளி முதல் மாடியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரடியாக தொட்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் உணவு, சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவர்.

    ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.750, 3-ம் பரிசாக ரூ.500, பேச்சுப்போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

    கிராமிய நடன போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×