என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கட்டணத்தை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
- குடிநீர் வரிக்கான ரசீது கிடைக்க பெற்ற உடன் ரசீதில் குறிப்பிட்டுள்ள வரி செலுத்த வேண்டிய காலத்திற்கு பிறகு வரிப்பணம் செலுத்தினால் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
- அதற்குண்டான அரசானை வெளியிடப்பட்டு 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வரி அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடிநீர் வரிக்குண்டான கட்டணத்தைச் செலுத்தும் படி பொது சுகாதாரக்கோட்டம், பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் அளவு கணக்கீட்டாளர் கணக்கெடுத்து, அதற்குண்டான கேட்பு வீட்டிற்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரிக்கான ரசீது கிடைக்க பெற்ற உடன் ரசீதில் குறிப்பிட்டுள்ள வரி செலுத்த வேண்டிய காலத்திற்கு பிறகு வரிப்பணம் செலுத்தினால் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் இணைப்பு கோரும் போது துண்டிப்பு மற்றும் மறு இணைப்புக்கான கட்டணமாக ரூ.5 ஆயிரம் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும்.
அதுபோல் புதுவை நகரப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வரி, பயன்பாட்டு வரியாக வசூலிக்க கடந்த 13.2.2017 அதற்குண்டான அரசானை வெளியிடப்பட்டு 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வரி அமலுக்கு வந்துள்ளது. அதற்குரிய கட்டணத்தை செலுத்தும்படி பொது சுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை சார்ந்த ஊழியர்கள், தபால் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் வரி கேட்பு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. ரசீதுகிடைக்க பெற்ற 30 நாட்களுக்குள் குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரிகளுக்கு ண்டான கட்டணங்களை செலுத்துமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரிகளை முறையாக செலுத்தி ஒத்து ழைப்பு கொடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்