என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் இணைப்பு துண்டிப்பு
    X

    கோப்பு படம்.

    குடிநீர் இணைப்பு துண்டிப்பு

    • பொதுப்பணித்துறை சுகாதார கோட்டம் எச்சரிக்கை
    • மீண்டும் இணைப்பு கொடுக்கும் போது மறு இணைப்புக்கான கட்டண மாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறை சார்பில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் அளவு குறித்து கணக்கீட்டாளர் கணக் கெடுத்து கட்டண ரசீது கொடுக்கப்படுகிறது. அவ்வாறு ரசீது கொடுக்கப் பட்டு 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தை செலுத்த தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் மீண்டும் இணைப்பு கொடுக்கும் போது மறு இணைப்புக்கான கட்டண மாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×