என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கியாஸ் மானியம், உதவி தொகை கிடைத்ததா?
    X

    கோப்பு படம்.

    கியாஸ் மானியம், உதவி தொகை கிடைத்ததா?

    • குடும்ப தலைவிகளிடம் வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி
    • காங்கிரசுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

    புதுச்சேரி:

    இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் ஆலோசனைக்கூ ட்டம் தர்மாபுரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

    தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    இங்குள்ள எத்தனை பேரின் குடும்ப பெண்களுக்கு ரூ.ஆயிரம் வந்துள்ளது? எத்தனை பேருக்கு சமையல் கியாஸ் மானியம் வந்துள்ளது? யாருக்கும் வரவில்லை. இதுதான் ரங்கசாமி ஆட்சியின் நிலை. காங்கிரசுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வட்டார தலைவர் மோகன்தாஸ், பி.சி.சி. உறுப்பினர்கள் ராஜசேகர், சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் ஆழ்வார், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×