என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அனுமதியின்றி இயங்கிய நடன மது பாருக்கு 'சீல்'
- நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
- புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும், வருவாயை பெருக்கும் நோக்கில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
இந்த ரெஸ்டோ பார்கள் அனுமதி நேரத்தை தாண்டி நள்ளிரவிலும் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
அதன்பேரில் கலால் மற்றும் போலீசார் மது பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் பெரியக்கடை போலீசார் சோதனை செய்தனர். அந்த பார் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜ், புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆணையர் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலை மையில் நகராட்சி ஊழியர்கள் பெருமாள் கோவில் வீதியில் இயங்கி வந்த ரெஸ்டோ பாரை பூட்டி 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்