என் மலர்
புதுச்சேரி

அபிஷேகப்பாக்கம் பகுதியில் குவி லென்ஸ் கண்ணாடியை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன் குமார் அமைத்துள்ளதை படத்தில் காணலாம்.
வளைவுகளில் குவி லென்ஸ் கொண்ட கண்ணாடிகள்-போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
- அபிஷேகப்பாக்கம் வழியாக செல்லும் மடுகரை சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
- இந்த விபத்துக்கு காரணம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தினால் நடந்ததாக தெரியவந்தது.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக செல்லும் மடுகரை சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவும், அபிஷேகபாக்கம் பகுதிகளில் வளைவுகள் அதிகமாக இருப்பதாலும் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்துக்கு காரணம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தினால் நடந்ததாக தெரியவந்தது.
இதனை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் நடவடிக்கை எடுத்தார். அதன்படி முதல் கட்டமாக அபிஷேகப்பாக்கம் பகுதியில் முக்கிய வளைவுகள் உள்ள 2 இடத்தில் குவி லென்ஸ் கொண்ட 2 பெரிய கண்ணாடிகள் இன்று அமைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர்கள் செஞ்சி வேல் ராஜசேகரன் ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் பலர் உடன் இருந்தனர்.
கிராமப்புறத்தில் விபத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தெரிவித்தார்.






