search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி
    X

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

    ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி

    • புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஹர்ஷவர்தன் 4-ம் பரிசையும் வழங்கினர்.
    • ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் ஆகியோர் வழங்கினர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திருபு வனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் தலைமையில் கிரிக்கெட் போட்டி மதகடிப்பட்டு அரசு கலைஞர் கருணாநிதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் திருபு வனை தொகுதிக்கு உட்பட்ட 14 அணிகள் போட்டியில் பங்கு பெற்றன. அதில் முதல் பரிசை ஆண்டியார் பாளையம் ராஜா கிரிக்கெட் கிளப்பும், 2-ம் பரிசை திருபுவனை பாளையம் பகுதியை சேர்ந்தகிரிக்கெட் கிளப்பும் , 3-ம் பரிசை கலிதீர்த்தாள் குப்பம் மின்னல் கிரிக்கெட் கிளப் அணியினரும் , 4-ம் பரிசை ஆண்டியார் பாளையம் ஸ்பார்டன் கிரிக்கெட் கிளப் அணியினர் பெற்றனர்.

    இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுவை காங்கிரஸ் கட்சியின்மாநில பொதுச் செயலாளர் சங்கர் முதல் பரிசையும் ,காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் கோனேரி லோகையன் 2-ம் பரிசையும், புதுவை மாநிலஇளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் 3-ம் பரிசையும் , புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஹர்ஷவர்தன் 4-ம் பரிசையும் வழங்கினர்.

    இப்போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்க ளுக்கு புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் ராஜாராம் சீருடைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளை மாநில இளைஞர் காங்கிரஸ்பொதுச் செயலாளர் தேவகுமார் , இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் செல்வப்பிரியன் , ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் ஆகியோர் வழங்கினர்.

    Next Story
    ×